ராஞ்சி மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதி குறைப்பால் நாட்டில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ரயில் விபத்து சம்ப வங்கள்அரங்கேறி வருகின்றன. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை ரயில் விபத்து சம்பவம் நடக்கும். ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு வாரத்திற்கு ஒருமுறை ரயில் விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மக்கள் ரயிலில் பயணம் செய்ய அஞ்சி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (12810) ஜார்க்கண்ட் மாநிலம் வெஸ்ட் அவுட்டர் - சக்ரதர்பூர் பிரிவில் உள்ள பாரபாம்பூ இடையே சென்று கொண்டிருந்தபோது, செவ்வா யன்று அதிகாலை 3.45 மணியளவில் 3 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள், ரயில்வே ஊழியர்களு டன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
முடங்கிய ரயில் சேவை
இந்த விபத்து காரணமாக மேற்கு வங்க ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 ரயில் சேவை கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 ரயில்கள் முந்தைய ரயில் நிலை யத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
'